இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளதா?

படம்
காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளதா? நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்ணின் உடலை குடும்பத்தினர் கூட இறுதி சடங்குகள் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரே அப்பெண்ணின் உடலை அவசரகதியில் எரித்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் ராகுலை பிடித்து கீழே தள்ளி அட்டகாசம் செய்தது யோகி தலைமையிலான உத்திரபிரதேச அரசு. அதன்பின் போலீஸார் ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களைக் கைது செய்து சில மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டிருந்தாலும் ராகுல் காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரஸார் 200 பேர் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் கவுதம் புத்தாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  காங்கிரஸ் எம்.பி. ராகு...

பாரத பிரதமர் மோடியை பதவி விலக கோரி #ResignModi ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்!

படம்
பாரத பிரதமர் மோடியை பதவி விலக கோரி  #ResignModi ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங்!   நாடு முழுவதும் 2020ல் கொரோனா தொற்று வேகமாக பரவி கொண்டிருந்த போது இந்தியா மெத்தனமாக நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல்  துவங்கியிருந்த காலகட்டத்தில் தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால்தான் வைரஸ் நாடு முழுவதும் பரவியது போல பலவிதமாக செய்திகள் திட்டமிட்டே பரப்பியது காவி கும்பல். பலர் கைது செய்யப்பட்டார்கள். வெறுப்பை உமிழும் வகையில் ஆதாரமில்லா காணொளிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. "தேசிய பேரிடர் மேலாண்மை என்று வரும்போது இதன் அதிகாரம் பரவலானது.  அதன் தலைவர் பிரதமர் மோடி ஆவார். ஜனநாயக முறைப்படி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் எதையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக மார்ச் 24, 2020ல் திடீர் பொது முடக்கம் அறிவித்தார் மோடி. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால் இந்திய ஏழை, எளிய, சாமனிய நடுத்தர குடும்பங்கள் பெருந்துன்பத்திற்க்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளானார்கள். வெளி மாநில தொழிலாளர்கள் நடந்தே ஊர் சென்றார்கள். அதில் சாலை விபத்துகளில் 29,41...

புதுச்சேரி மாநில அந்தஸ்தும் என்.ஆர்.காங்கிரஸின் நாடகமும்!

படம்
மாநில அந்தஸ்தும் என்.ஆர்.காங்கிரஸின் நாடகமும்! அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 11-ம் ஆண்டு தொடக்க விழா ஈசிஆர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிப். 7 கொண்டாடப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசியவர், மாநில அந்தஸ்துக்காக தேர்தலைப் புறக்கணிக்க நாங்கள் தயார் நீங்கள் தயாரா என அனைத்து கட்சிகளுக்கும் சவால் விடுத்தார். மாநில அந்துஸ்துக்காக டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்த வருமாறு ரங்கசாமிக்கு சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியும்  அழைப்பு விடுத்தார்.  மாநில அந்தஸ்து பெறும் வரை புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை அனைத்து கட்சியினரும் புறக்கணிக்க முன்வந்தால் புதுச்சேரி மக்களின் நலனிற்காக திமுக தலைவரின் அனுமதியுடன் அதில் திமுகவும் பங்கேற்கும். திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தெரிவித்தார். தேர்தல் புறக்கணிப்பில் உடன்பாடில்லை எனவும் இது குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் எனவும் எதிர்கட்சி தலைவரின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து எனவும் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி கட்சியான அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் கருத்து தெரிவித்துள...

புதுச்சேரி பெண்களின் அரசியல் பயணம்!

படம்
வாடி ராசாத்தி! நமது நாட்டின் மக்களாட்சிக்கு வயது 69. இதில் பெண்கள் தங்கள் உரிமைகளை பெற கடந்து வந்த தூரம் மிக அதிகம்.  அதில் வளர்ச்சியும் வீழ்ச்சியையும் சேர்ந்தே பார்த்திருக்கிறார்கள். நமது மக்களாட்சியின் அரசியல் நடைமுறைகளிலும், மக்கள் தொகையிலும் சரி பாதியாக இருக்கும் பெண்களின் அரசியல் ஈடுபாடு எத்தகையது??? எத்தனை பேர் அரசியல் வானில் பறக்கிறார்கள்? அரசியல்வாதியாக ஒரு பெண் உருவாவது அடுத்த கட்டம். பெண்கள் ஓட்டுரிமைக்கே பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். மதராஸ் மாகாணத்தில் 1921ல் சொத்து வைத்திருந்த பெண்கள் மட்டுமே ஓட்டளிக்க வாய்ப்பு பெற்றனர். ஆனால் இங்கிலாந்தில் 1928ம் ஆண்டு தான் வாக்குரிமையை பெண்கள் பெற்றனர். "அரசியலில் இறங்கினால் பெயர் கெட்டுவிடும். எங்கள் குடும்பத்தினரே எங்கள் ஒழுக்கம் பற்றிய பல பிரச்சனைகளை எழுப்புவார்கள், மரியாதை கிடைக்காது, அரசியலில் இறங்க பெரிய பணக்கார குடும்பமாக இருக்கணும்" இவைதான் பெரும்பாலும் பெண்களிடம் இருந்து வரும் பதில்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதா??? பலமான பின்புலம் இல்லாமல் பெண்களால் அரசியலில் ஈடுபட முடியாதா? இன்று அரசியல் வானில் மின்னும் ...

சிறுபான்மையினரை இழிவு செய்யும் பாசிச மகாராணிகள்!

படம்
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து  வேந்தனும் வேந்து கெடும். - திருக்குறள் உயர்ந்த கொள்கையும் உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும். அது போலத்தான் புதுவை மக்களின் கொள்கையும் உறுதியும் என்பதை வலியுறுத்தியது புதுவை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியது. புதுவை கவர்னர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு ஜூன் 2018 இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனை கண்டித்து புதுவை மாநில இந்து முன்னணி சார்பில் நேரு வீதி- காந்தி வீதி சந்திப்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடந்தி கவர்னருக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்துக்களுக்கு தீபாவளி விருந்து, பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் விருந்து வழங்காமல் கவர்னர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டியது அனைவருக்கும் நினைவிருக்கும். கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பியதும் அதனை பொருட்படுத்தாத கிரண்பேடி பரபரப்பான சூழ்நிலையிலும் கவர்னர் மாளிகையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அவசரகதியில் நடந்து முடிந்தது. கடந்த 2018 ராஜ்நிவாஸ் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி...

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

படம்
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் என்ற திருக்குறளுக்கேற்ப மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம். தன் குடிகளை காக்க வேண்டிய அரசாங்கமே குடிக்கச் சொல்லி வீதியெங்கும் மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளதே பெரும்பான்மையான குற்றங்களுக்கு காரணம்.  உலகம் முழுவதும் ஏறத்தாழ மொத்த மக்கள் தொகையில் 3.6 முதல் 6.6 சதவீதம் பேர் வரை போதைப் பழக்கத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். புகையிலை, மது, கஞ்சா, ஹெராயின், எல்.எஸ்.டி. , ஓப்பியம் கலந்த போதைப் பொருட்கள், பிரவுன் சுகர், கூல் லிப் என பல வகையான போதை வஸ்துக்கள் புதுச்சேரியில் கள்ளசந்தையில் புழங்குவதாக கூறப்படுகிறது. சென்ற மாதம் அதிக கல்வி நிறுவனஙகள் இயங்கும் லாஸ்பேட்டை பகுதியில் ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருள், பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. போதைக்கு அடிமையான பலரின் உடல் உறுப்புகள் உருகுலைந்துக் கிடக்கிறது.  இருதயநோய், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட 10 கொடிய நோய்கள் வருவதற்கு போதை பொருட்கள...

தண்ணீர் தண்ணீர்

படம்
 தண்ணீர் தண்ணீர் "வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும் நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோலுயரும் கோலுயரக் கோன் உயரும்" என்று ஓர் அரசாட்சியில் நீர் மேலாண்மையின் அவசியத்தை உணர்த்தும் விதமாக விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் நீர் அதிகளவு தங்கியிருக்கும். அப்போது நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். மக்களின் வறுமை ஒழியும். அப்போதுதான் அரசு சிறக்கும். ஒரு அரசின் பெருமை, வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அமைந்து விடுகிறது என்பதை ஒளவையார் எளிமையாக எடுத்துரைக்கிறார். ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் புதுச்சேரி பெருமைக்குரிய  இடம் பெற்றிருந்தாலும், வாழத்தகுதியற்ற இடமாக புதுச்சேரி மாறும் அவல நிலை  ஏற்பட வாய்ப்புள்ளது. ஆச்சரியமாக உள்ளதா? ஆம். வாழ தகுதியற்ற இடமாக புதுச்சேரி மாற வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் 300க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதுவையின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்காமல் இருக்க பாதாள சாக்கடைத்திட்டம் அமல் செய்யப்பட்டு நேரடியாக கால்வாய் ந...

பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சி!

படம்
இந்திய பொதுத் துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எந்தவித உதவியும் செய்யாத மத்திய அரசு, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு எண்ணிலடங்கா சலுகைகளை கொடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. பொதுத் துறை நிறுவனங்களின் வசம் உள்ள நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் சூழ்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ வந்த பின்னர் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சில பின்னடைவை சந்தித்தன. அதன் எதிரொலி அனைத்து வாடிக்கையாளர்களிடமும் தெரிந்தது. நீண்ட நாட்களாக ஒரே சிம் கார்டை பயன்படுத்தி வந்தவர்கள் கூட, டேடா மற்றும் போன் பேசுவதற்காக ஜியோ சிம் கார்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அம்பானியின் அதிரடி ஆஃபரே இதற்கு காரணம்.  டேடாக்களை இலவசமாக அள்ளிக்கொடுத்து அதன்மூலம் வாடிக்கையாளர்களை பிடித்தவர் அம்பானி. இன்னும் அவரது ஆஃபர்களில் இருந்து வாடிக்கையாளர்களால் மீளமுடியவில்லை. தற்போதும் குறைந்த விலைக்கு டேடா கிடைக்கிறது என ஜியோவை கோடிக்கணக்கானோர் பயன்படுத்திக்...

அழிவின் விளிம்பில் இருந்து மீளுமா தேங்காய்திட்டு ?

படம்
புகழ்மிக்க சுற்றுலா நகரமான புதுச்சேரியின் மைய பகுதியில் அமைந்துள்ளது தேங்காய்திட்டு துறைமுகம். துறைமுகச் சாலை துவங்கியதுமே நம்மை மாங்குரூவ் மரங்கள் வரவேற்கும். இந்தியாவிலேயே மொத்தம் 12 இடங்களில் மட்டுமே சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இதில் நம் புதுச்சேரி மாநிலமும் ஒன்று. இந்த பெருமைக்குரிய மாங்குரூவ் காடுகள் சதுப்பு நிலங்களில் மட்டுமே செழித்து வளரக்கூடியவை. ஆனால் அவை புதுச்சேரி நகரத்தின் வளர்ச்சியாலும், சுகாதாரமின்மையாலும் தேங்காய்திட்டு பகுதி மாசடைந்து வருகிறது. மீன் பிடிப்பு மேய்ச்சல் மற்றும் மண்ணை அப்புறப்படுத்துதல் போன்றவையாலும் இப்பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரி மாநிலம், தேங்காய்திட்டு துறைமுகம் செல்லும் சந்திப்பில் உள்ள சதுப்பு நிலக்காடுகளை மாசுபடுத்தும் வகையில் புதுச்சேரி நகரப் பகுதிகளில் இருந்து குப்பை கழிவுகள், மருத்துவ கழிவுகள், ப்ளாஸ்டிக் கழிவுகள், மக்காத கட்டிடக் கழிவுகள், மீன்பிடிக்கும் உபகரணக் கழிவுகள், மீன் கழிவுகள், வீட்டுக் கழிவுகள், குடோன் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் என அனைத்தையும் கொண்டு வந்து மாங்குரூவ் மரங்கள் அருகே கொட்டிவிட்டு சென்றுவிடுகின்...

சூது கவ்வும்!

படம்
சூலை 15, 2019 அன்று எழுதப்பட்டது. காங்கிரஸ் கூட்டணியின் மீது கிரண்பேடியின் செயல்படுகளால்  ஏற்படவிருக்கும் தாக்கதத்தை தேர்தலுக்கு முன்பே கணித்து எழுதியது: புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாள் முதல் உட்கட்சி பூசல்கள், சட்டமன்ற தேர்தல், துணை நிலை ஆளுநரின் கெடுபிடிகள், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம், பாராளுமன்ற தேர்தல், இடைத் தேர்தல், ரேசன் அட்டைகளுக்கு இலவச அரிசி போட முடியாமை என பல நெருக்கடிகளை சமாளித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. துணை நிலை ஆளுநரின் வரையருக்கப்படாத அதிகாரங்களால் புதுச்சேரி அரசாங்கத்தை பல முறை கதறவிட்டிருக்கிறார். ஜனநாயகத்தை உயிர்ப்பிக்க தர்ணா போராட்டங்களும், டெல்லிக்கு சென்று போராடியும், சட்டப் போராட்டங்களை தொடர்ந்து, மக்களதிகாரத்தை காப்பாற்றியிருக்கிறது புதுச்சேரி காங்கிரஸ் கட்சி! எதிர்கட்சிகளின் ஆதரவின்றி, புதுச்சேரி மாநில உரிமையை மீட்டெடுக்க புதுவை அரசு பாஜக என்னும் பாசிச கும்பலை எதிர்த்து போராடி வெற்றி கண்டுள்ளது. ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்ற வரிகளுக்கேற்ப புதுவை மாநிலத்தில் மக்களால் ...

இந்திய தன்னாட்சி அமைப்புகளைச் சிதைக்கும் மோடி அரசு!

படம்
மோடி ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை ஆராய்ந்தால், இந்திய ஆட்சிமுறையின் தன்னாட்சி அமைப்புகளை முற்றாக அடிபணிய வைத்தது மட்டுமே.  அரசியல் சாசனத்தால் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்ட அமைப்புகளான தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, இந்திய தலைமை கணக்காயம் (சி.ஏ.ஜி.), மத்திய புலனாய்வு ஆணையம் (சி.பி.ஐ.) மற்றும் அகில இந்திய மருத்துவ கவுன்சில், யு.ஜி. சி., தன்னாட்சி உரிமை பெற்ற கல்வியியல் உயராய்வு நிறுவனங்கள் (ஜே.என்.யு., ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகம் போன்றவை) போன்றவையும் இவற்றில் அடங்கும். இப்போது அந்த வரிசையில் புதிய கல்விக் கொள்கை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திருத்தம் என கல்வித்துறையிலும் தகவல் ஆணையத்தின் சிரத்தன்மையையும் நீர்த்துபோகச் செய்யவிருக்கிறது மத்திய அரசு. தன்னாட்சி உரிமை பெற்ற அனைத்து அமைப்புகளையும் அதன் வடிவமைப்பினைகளையும் மீட்க முடியாத அளவுக்குச் சிதைத்துக் கொண்டிருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதிலிருந்து மத்திய வங்கியுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரும் இடையூறாகவும், ஆபத்தாகவும் மாறியது அனைவருக்கும் நின...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விளைநிலங்கள் உப்பளங்களாக மாறும்!

படம்
 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பதன் காரணம் என்ன? கார்பன் மற்றும் ஹைட்ரஜனை மட்டும் உள்ளடக்கியது ஹைட்ரோ கார்பன். இந்த ஹைட்ரோ கார்பன்கள் ஆக்சிஜன் உதவியோடு எரிபொருளாக பயன்படுகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவமே ஹைட்ரோ கார்பன்கள் தான். பூமிக்கடியில் இந்த ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட இடங்களில் புதுச்சேரியும் ஒன்று. புதுச்சேரியில் 116 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளதாக புதுவை அரசிற்கு கடிதம் வந்ததையடுத்து, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு வழங்காது என முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு திட்டவட்டமாக மறுத்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதியது மட்டுமல்லாமல் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகள், இயக்கங்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து புதுச்சேரியில் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டமும் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்...