புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?!
புதுச்சேரி கலைமாமணி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெண் ஆளுமைகள் புறக்கணிப்பு?! புதுச்சேரி மாநிலத்தில் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம்- சிற்பம் மற்றும் நாட்டுப்புறக்கலை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளும், தமிழுக்கு சிறந்த தொண்டு புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்மாமணி விருதுகளும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பாக வழங்கப்பட்டு வந்தது. புதுவையில் நாற்பது ஆண்டுகளுக்கு பின் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திரு.சந்திர பிரியங்காவின் தலைமையில் இயங்கும் கலை பண்பாட்டுத் துறையில் அறிவிக்கப்படும் கலைமாமணி விருதுகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பது வேதனையின் உச்சம். பத்தாண்டுகள் கழித்து விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கலைக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆளுமைகளை விருதுக்கு தேர்ந்தெடுக்காதது ஏன்? ஆளுமை பெண்கள் பலர் இருந்தும், அனுபவம் வாய்ந்தவர்களையும் தகுதியானவர்களையும் புறக்கணித்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழுக்கும் கலைக்கும் பேச்சு, மொழி என பல்வேறு துறைகளில் குடும்பம், சமூகம் என