இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடா இந்தியா?

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்... என்ற செய்தியை ஏற்கமுடியவில்லையா.... பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா??? பெண் எந்த மதத்தை பெண் எந்த ஊரை சேர்ந்திருந்தாலும், பெண் எந்த சாதியை சேர்ந்திருந்தாலும், பெண் வேலை செய்யும் இடத்திலும், குடும்பத்திலும், பாலியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, உளவியல்ரீதியாக, சமூகரீதியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. உலகிலுள்ள அனைத்து பெண்களுமே ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவராலாவது பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இது ஒரே நாளில் சரி செய்ய முடியாத ஒன்று. யாரையும் சாடி யாரையும் குறை சொல்லி ஒன்றும் நிகழப்போவது கிடையாது. இது ஒரு தொடர் கதை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியவர்கள் கல்வியாளர்களும் ஆட்சியாளர்களும்.... பெண் பற்றிய புரிதல், சமூக பாலின வேறுபாடு, சமூகத்தின் பார்வையை மாற்றி அமைக்க வேண்டியது நமது கடமையும் கூட.... பெண் அல்லது ஆண் இருவரும் சேர்ந்ததே சமூகம். இந்த சமூகப்பிணைப்பை இளம் தலைமுறையினருக்கு கற்றுத்தர வேண்டிய அவசியமும் ...

உயிர்பலி வாங்கும் புதுச்சேரியின் தரமற்ற சாலைகள்!

படம்
தரமற்ற சாலையால் பெண் சாலை விபத்தில் மரணம்! புதுச்சேரி அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்! இறைவி வலியுறுத்தல்! கடந்த ஆறு ஆண்டுகளில், புதுச்சேரியில் சாலை விபத்துக்களில் மட்டும் 1,044 பேர் மரணித்துள்ளனர், 7,164 பேர் காயமடைந்துள்ளனர் என்று ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதிக்கு RTI மூலம் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியில் தினமும் சராசரியாக நான்கு பேர் காயமடைவதையும், மாதந்தோறும் சுமார் 15 பேர் இறந்து போவதை இந்த தகவல் குறிப்பு காட்டுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 3.6.2022 காலை ரெட்டியார்பாளையத்தில் நடந்த விபத்தில், 43 வயதான, முத்தி ரயார் பாளையத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் ராஜவள்ளி என்பவர் தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தனியார் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்கான உண்மை காரணம் என்ன?  கடந்த 5 ஆண்டுகளாக வரலாறு காணாத மழை புயல் வெள்ளம் ஆகியவற்றை புதுச்சேரி எதிர்கொண்டிருக்கிறது. புதுச்சேரிக்கு பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளையும் உட்கட்டமைப்...

சங்கம் முக்கியமா சோறு முக்கியமா?

படம்
சங்கம் முக்கியமா சோறு முக்கியமா? செங்கல்பட்டு ஸ்கூல்னு சொன்னா பொம்பள பிள்ளைங்களா இருந்தா புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளின்னும் பயபுள்ளைகளா இருந்தா புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளின்னும் சுத்து வட்டார கிராமங்களிலும் நகரத்திலும் ரொம்ப பேமஸ். குறைஞ்ச பீஸ்ல ஆங்கில வழிக்கல்வியும் தமிழ்வழிக் கல்வியும் சமத்துவ உணர்வோடு கெடுபிடிகளுடன் கல்வி கற்க வாய்ப்பா கிடைச்ச பள்ளிகள் இவை. 2003ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று காமர்ஸ் குரூப் எடுத்தோம். வகுப்பில் மொத்தம் 25 பேர். இதில் 15 பேர் பத்தாம் வகுப்பு வரை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலே கல்வி கற்றவர்கள். சூசையப்பர் பள்ளியிலிருந்து ஒரு 4 பேரும் மற்ற சில ஊர் பள்ளிகளில் இருந்து 6 பேரும் +1 வகுப்பு காமர்ஸ் க்ரூப் எடுத்து ஒன்றாக சேர்ந்திருந்தோம்.  2000க்கும் மேற்பட்ட பெண்பிள்ளைகள் படிக்கிற ஸ்கூல். இன்டர்காம் வசதி, சத்துணவுத்திட்டம் உண்டு, பெரிய விளையாட்டு மைதானம் உண்டு. கூடைபந்து கைப்பந்து என அடிக்கடி காலை அசெம்பளியின் போது கூப்பிட்டு பாராட்டு உபசாரங்கள் அடிக்கடி நடக்கும். முக்கியமான விழாக்களின் போது திருப்பலிகள்...