இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்களின் அலமாரியில் உங்களுக்கு என்ன வேலை?

படம்
புதுச்சேரியில் தொடர்ந்து பெண்கள் அணியக்கூடிய ஆடையை பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனை முன்வரிசையில் நின்று மறுதளித்து பேச வேண்டிய பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பொறுப்பற்ற முறையில் பெண்களின் ஆடை மீதான விமர்சனங்களை முன் வைத்தும் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வரக்கூடாது கரடி சிங்கம் கடித்துவிடும் என்று மாணவர்கள் மத்தியில் பேசியது, அதிமுகவின் புதுச்சேரி நிர்வாகி அன்பழகனும் சுற்றுலாப்பயணிகளை குறி வைத்து அவர்களின் அடை சுதந்திரத்தின் மீது தனது வக்ர பார்வைகளை கண்டனம் என்ற பெயரில் பதிவு செய்தது, ஹைதராபாத்திலிருந்து ஐடி பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த போது அரைகுறையாக ஆடை உடுத்திக் கொண்டு ஆசிரம பகுதிகளில் உலா வரக்கூடாது என்று சொன்ன போலீஸ் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலாப்பட்டிற்கு மாற்றம் செய்து தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டது புதுச்சேரி காவல்துறை.  ஒரு பெண் ஆளுநராக இருக்கும் போதும், ஒரு பெண் மூத்த காவல் கண்காணிப்பாளராக இருக்கும் போதும் பெண்களுக்கான நியாயமும்  நீதியும் மறுக்கப்படுவது மிகுந்த வலியை...

கற்பகவிருட்சம்

படம்
கற்பகவிருட்சம்! உணவு என்பது உயிர்க்கு அமுது. ‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து’ என்பது மணிமேகலை. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ எனும் வள்ளுவரின் வாக்கையும் சொல்வது சுலபம். ‘வீடு தோறும் இரந்து பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்’ என்கிறார் வள்ளலார். செங்கல்பட்டு பக்கத்துல சின்ன கிராமத்தில மண்ணெண்ணெய் சில்லரை வியாபாரம் தான் அப்பாவின் தொழிலாக இருந்தது. அப்பொழுது மண்ணெண்ணெய் பயன்படுத்திக் கொண்டிருந்த எல்லோரும் சிலிண்டருக்கு மாறிக் கொண்டிருந்த சமயம். ஊரில் யார் இறந்தாலும் எரிக்கும் வழக்கமுடையோர் எங்களிடம் தான் மண்ணெண்ணெய் வாங்கி செல்வார்கள். ஏழை குடும்பங்களுக்கு சில்லரை வியாபாரமும், ஹோட்டல்களுக்கு மட்டுமே வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் ஒரு ஹால் கிச்சன் கொண்ட நான்கு தனி ரூம்கள் வாடகைக்கு இருந்தது. ஆனால் குடியிருக்க யாருமில்லை.   மண்ணெண்ணெய் விலை ஏறியதால் அதனை வாங்கி விற்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். பல்வேறு பொருளாதார நெறுக்கடிக்களால் குடும்பம் வருமானமின்றி வறுமையில் சிக்கித் தவித்த காலம்...